Print and Digital Media

தமிழக வீரர் குகேஷ், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

தமிழக வீரர் குகேஷ், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. 'கேண்டிடேட்ஸ்' தொடரில் கோப்பை வென்ற உலகின் 'நம்பர்--5' இந்தியாவின் குகேஷ் 18, 'நடப்பு உலக சாம்பியனும்', உலகின் 'நம்பர்--15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர்.

மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் 12 சுற்றுகளின் முடிவில், இருவரும் தலா 6.0 புள்ளி பெற்று சம நிலையில் இருந்தனர்.

நேற்று 13வது சுற்று நடந்தது. குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் அடுத்தடுத்து குகேஷ் தடுமாறினார். முடிவில் 68 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இதையடுத்து இருவரும் 6.5 புள்ளிகளுடன் இருந்தனர்.

இன்று கடைசி மற்றும் 14வது சுற்று நடந்தது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இதில், போட்டி 'டிரா'வில் முடியும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பிறகு சிறப்பாக விளையாடிய குகேஷ், 58வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் பட்டம் வென்ற குகேஷூக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தி லெஜண்ட்
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் இருந்து கோடியக்கரை வரை சாகர் கவாச் ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் இருந்து கோடியக்கரை வரை சாகர் கவாச் ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் இருந்து கோடியக்கரை வரை சாகர் கவாச் ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட  போலீசார் கடற்கரையோரத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் இருந்து கோடியக்கரை வரை சாகர் கவாச் ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது.100க்கும் மேற்பட்ட  போலீசார் கடற்கரையோரத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, கியூ பிரிவு, மத்திய-மாநில உளவுத்துறை போலீசார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஈடுபடுகின்றனர்.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சிபிசிஎல் ஆயில் ஜட்டி பகுதி நாகப்பட்டினம் துறைமுகம்,வேளாங்கண்ணி விழுந்தமாவடி ஆற்காட்டுதுறை,வேதாரண்யம், கோடியக்கரை, உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீசார் கடற்கரை ஓரங்களில் சாகர் கவாச் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கும், தங்கம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இங்கிருந்து கடத்தப்படுவதை முறியடிக்கவும் இன்று தொடங்கிய இந்த பயிற்சி ஒத்திகை நாளை மறுநாள் வரை 48 மணி நேரம் நடைபெறுகிறது.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#காவல்துறை
திருவாரூரில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை சுட்டுப் பிடித்த காவல்துறையினர். 

திருவாரூரில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை சுட்டுப் பிடித்த காவல்துறையினர். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி களப்பால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோ நிர்மல்ராஜ் மற்றும்  அவரது நண்பர்கள் ஷியாம், தயாநிதி, மாறன், தென்னரசு, மாணிக்கம் உள்ளிட்ட ஆறு நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நீடாமங்கலம் அருகே ஆதனுர் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் தலைமையான காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்தனர். அப்போது தப்பி ஓடிய மனோ நிர்மல்ராஜை பிடித்த காவலர் விக்னேஷை, தன்னிடம் இருந்த அரிவாளால் மனோ நிர்மல்ராஜ் வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

இதனையடுத்து நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு முன்னெச்சரிக்கை விடுத்தும், அதனை பொருட்படுத்தாமல் மனோ நிர்மல்ராஜ் தப்பிச் சென்றார். இதனையடுத்து மனோ நிர்மல்ராஜின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார் நீடாமங்கலம் ஆய்வாளர் சந்தோஷ் குமார்.

ரவுடி மனோ நிர்மல்ராஜ் மற்றும் காவலர் விக்னேஷ் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#காவல்துறை
ஒரத்தநாடு கூட்டுப் பாலியல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டாஸ் வழக்குப் பதிவுக்கு பரிந்துரை.தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பேட்டி.

ஒரத்தநாடு கூட்டுப் பாலியல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டாஸ் வழக்குப் பதிவுக்கு பரிந்துரை.தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பேட்டி.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கூட்டுப் பாலியல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவம் மற்றும் உளவியல் உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாகவும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும் போது,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்கள் சேகரிக்கப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் 17 வயது சிறுவன் தொடர்புடையதால் அச்சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான்.

மீதமுள்ள முதல் குற்றவாளி கவிதாசன் , திவாகர்,பிரவீன் ஆகிய மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ உதவி உளவியல் ரீதியான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#காவல்துறை
#பொது
ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள், குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி பேட்டி.

ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள், குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி பேட்டி.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் இன்று பதவி ஏற்றுகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கூறுகையில்,ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள்,குற்றங்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், மேலும் கஞ்சா கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

மதிவாணன்.எஸ்.பி.

மேலும் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையினரும் அந்தந்த காவல்நிலைய ஆய்வாளர்களும் தான் பொறுப்பு.மேலும் புகார் அளிக்க வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து அவர்களின் குறைகளை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன் மற்றும் ரிப்பேரியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினரிடம் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#காவல்துறை
#பொது
புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரி 16 வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரி 16 வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இறுதி நாளான இன்று, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள்  நாஜிம், செந்தில்குமார், நேரு ஆகியோர் தனி நபர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.

அதில் பிரெஞ்சுக்காரர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற காலம் முதல், மத்திய அரசின் உள்துறையால் ஆளப்படுகின்ற பகுதியாக புதுச்சேரி தொடர்ந்து கொண்டிருக்கிறது.கோவா,சண்டிகர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் மாநிலத் தகுதி பெற்று நன்றாக வளர்ச்சி அடைந்திருக்கின்றன.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்காததால் எதிர்பார்த்த வளர்ச்சி அடைய முடியவில்லை.பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கோரிக்கை 1972ம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இத்த தீர்மானத்தை பரிசீலிக்கும் வகையில்  குழு அமைக்காதால் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று மத்திய  அரசு தெரிவித்துள்ளது.எனவே புதுச்சேரி மாநில உரிமைக்காகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றும், இந்த சட்டமன்றத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கை மத்திய அரசு ஏற்கும் வரையில் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றனர். 

சிவா,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்.

இதனைத் தொடர்ந்து பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும். அதை பெற்றுத் தீர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் உணர்வு பூர்வமாகவும், மிக விரிவாகவும் பேசினர்.தீர்மானங்கள் மூலம் மாநில அந்தஸ்து தர வலியுறுத்துகிறோம். பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை நேரில் டெல்லி சென்று சந்திப்போம். இந்தியாவில் உள்ள மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் வைப்போம். மாநில அந்தஸ்து பெற்று தீருவோம்.  எனவே இதனை அரசு தீர்மானமாக  நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இதையடுத்து தனிநபர் தீர்மானங்கள் திரும்ப பெறப்பட்டு,  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து பேசிய சபாநாயகர் செல்வம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இச்சட்டப்பேரவை வலியுறுத்துவதாகவும்,தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார் சபாநாயகர் செல்வம்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#பொது
#அரசியல்
உடல் நலம் பாதிக்கப்பட்ட காவலரின் மருத்துவ செலவிற்கு பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன் ரூ.3 லட்சம் நிதியுதவி.

உடல் நலம் பாதிக்கப்பட்ட காவலரின் மருத்துவ செலவிற்கு பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன் ரூ.3 லட்சம் நிதியுதவி.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பணியின் போது பாத்ரூமில் மயங்கி விழுந்து தலையில் பலத்த காயமுற்ற காவலர் பாலமுருகன் (35) சிகிச்சை செலவிற்கு பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் தென்கரை ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் 4ல் டூவீலரில் ரோந்து பணியின் போது பெரியகுளம் காவலர் குடியிருப்பில் உள்ள பாத்ரூமிற்கு சென்றார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார்.தலையில் பலத்த காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது குடும்பத்தினர், மற்றும் காவல் துறை நண்பர்கள் உதவியுடன் இதுவரை ரூ.21 லட்சம் சிகிச்சைக்கு செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் தனது சொந்த பணம் ரூ.3 லட்சத்தை பாலமுருகனின் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்தினரிடம் வழங்கினார்.தற்போது பாலமுருகன்
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த 2010 பேட்ஜ் போலீசார் விருமாண்டி, லட்சுமணன், ஆகாசகாளை, விஜயலட்சுமி, பாரதி ஆகியோர் பெரியகுளம் ஆர்.டி.ஓ.,முத்துமாதவனுக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#ஆட்சித்துறை
#பொது
ரேஷன் கார்டுதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் பிரச்னை இன்னும் 10 நாளில்   தீரும் என கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் பிரச்னை இன்னும் 10 நாளில்   தீரும் என கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்,வித்யா நகர், திண்டல் கிளையில் மஞ்சள் அரவை செய்யும் பணியினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும் போது,

கடந்த சில வாரமாக டெல்டா மாவட்டங்களிலும், கடலுார் போன்ற பகுதியிலும்,தற்போது மேற்கு மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகிறேன். இன்று ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், கூட்டுறவு துறையின் உற்பத்தி பொருளான மங்களம் மசாலா பொருட்கள், குடோன்கள்,ஏல முறைகளை ஆய்வு செய்தேன்.இங்கு மஞ்சளை, 3 வகையாக பிரிக்கும், 1 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திர செயல்பாட்டை பார்த்தேன்.கூட்டுறவுத் துறை மூலம்,உணவு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக மாநில அளவில் பொருட்கள் வாங்கும், 1.14 கோடி ரேஷன் கார்டுகள் பயன் பெறுகிறது. 

இதற்கு தேவையான அரிசியை கொள்முதல் செய்யும் பணியும் உள்ளது. தற்போது அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை அடுத்து சம்பா சாகுபடி பணிகள் நடக்கும். அறுவடையின்போது நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, நெல்லை கொள்முதல் செய்து, அறவை செய்து தயார்படுத்த வேண்டும்.தமிழகத்தில் தற்போது, 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. தேர்தல் நேரத்தில், 3.01 லட்சம் பேர் புதிய கார்டுக்கு விண்ணப்பித்து தற்போது அவை சரி பார்த்து, 2.8 லட்சம் கார்டு தயார் நிலையில் உள்ளது.இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.

கூட்டுறவு கடன் இந்தாண்டு, 26 முதல், 30 வகையான கடன் வழங்கப்படுகிறது. விவசாய கடன்,கறவை மாடு கடன், மகளிர் குழு கடன் அனைவருக்கும் தெரியும். ஆனால் தெரியாத பல கடன்கள் உள்ளன. அதற்கான இலக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் காலாண்டில், 2.78 லட்சம் பேருக்கு, 26,888 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

விவசாய கடன், 16,500 கோடி ரூபாய், கால்நடைக்கு, 2,500 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாய கடனில் இதுவரை, 3.46 லட்சம் பேருக்கு, 3,081 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தின் வேளாண் கடன் இலக்கு, 1,140 கோடி ரூபாயாகும். அதில், 171 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வருமாண்டில் அதிகமாக கடன் வழங்கப்படும். ஏற்கனவே கடன் பெற்ற விவசாயிகளுடன், புதிய விவசாயிகள், பிற நபர்களுக்கு கடன் வழங்க வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் தான் மிக அதிகமாக, 380 குடோன்கள் உள்ளன. 20.44 லட்சம் டன் சேமிக்கும் வசதிகள் உள்ளன.தேவையான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளன.ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் பருப்பு, பாமாயில் வரத்தில் தாமதமானது. 

தற்போது விரைவாக பெறப்பட்டு, விரைவாக வழங்கி வருகிறோம். தேவைக்கு முன்கூட்டியே பொருட்களை வாங்க, அரசு ஆர்டர் வழங்கி உள்ளது. மாத தேவைக்கு, 20,000 டன் துவரம் பருப்பும், 2.36 கோடி பவுச் பாமாயிலும் ஆர்டர் போட்டு வாங்கி உள்ளோம். அடுத்த, 10 நாளில் இப்பிரச்னை தீரும். முழுமையாக தீர, இம்மாத இறுதியாகும். விட்டுப்போன ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இம்மாதம் பொருட்கள் முழுமையாக கிடைக்கும்.தேவை அடிப்படையில், 4,536 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தவிர, சொசைட்டிகள் லாபகரமானதாக செயல்பட தேவையான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம்.கூட்டுறவு பணியாளர்களுக்கு சம்பளம், காலிப்பணியிடம் நிரப்ப கேட்கின்றனர். ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்குதல் போன்றவற்றை தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கூட்டுறவில் பல்வேறு கடன் வழங்குவதுடன், கல்வி கடனும் வழங்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. சமுதாய நோக்கில் வழங்கப்படும் கடன் என்பதால், இம்மாவட்டத்துக்கு, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.பிற மாநிலங்களில் மத்திய அரசு மானியத்தில் தரும் பொருட்களை மட்டுமே,ரேஷனில் வழங்குகின்றனர். 

தமிழகத்தில் மட்டுமே அவற்றுடன், மாநில அரசால் ராகி உட்பட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல், தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது.பல நபர்களுக்கு கைரேகை பதிவு பிரச்னையால், கண் விழி பதிவு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு கண் விழி பதிவிலும் பிரச்னை எழுந்தால், அவர்களது கை ரேகை பதிவை பெற்று பொருள் வழங்கப்படும்.

மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதர விலை வழங்க கோரி உள்ளனர். இதுபற்றி வேளாண் ஆணையருக்கு தெரிவித்து நடவடிக்கைக்கு யோசனை தெரிவிக்கப்படும்.
கூட்டுறவு தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி, உறுப்பினர் சரி பார்ப்பு பணிகள் நடக்கிறது.ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்கும் திட்டத்தில், ஜி.எஸ்.டி., கட்டணம் வருவதால், அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது. அதில் சில சிக்கல்கள் உள்ளதால், அது தொடர்பான துறைகளிடம் பேசி வருகிறோம்.

தவிர, கூட்டுறவு சார்பில், 62 பொருட்களின் கடந்தாண்டு, கடந்த மாதம், இன்றைய நிலைகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இது விலையேற்றத்துக்கு தீர்வு காணும் பணியாக அமையும்.தற்போது, 16 புதிய பொருட்களை சேர்த்து, அதன் விலைகளையும் கண்காணிக்கிறோம். நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கூடுதல் ஆட்சியர் சதீஸ், மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#ஆட்சித்துறை
#பொது
தமிழ்நாட்டில் 25 அதிகாரிகள் இடமாற்றம்.4 புதிய மாநகராட்சிகளுக்கும் ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

தமிழ்நாட்டில் 25 அதிகாரிகள் இடமாற்றம்.4 புதிய மாநகராட்சிகளுக்கும் ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார். புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி, 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதா, தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய சட்டத் திருத்ததின் படி திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, புதிதாக உருவாக்கப்படும் நாமக்கல் மாநகராட்சி ஆணையராகவும், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் எஸ்.சித்ரா, புதிதாக உருவாக்கப்படும் காரைக்குடி மாநகராட்சி ஆணையராகவும், கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், புதிதாக உருவாக்கப்படும் திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையராகவும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன்,புதிதாக உருவாக்கப்பட உள்ள புதுக்கோட்டை மாநகராட்சியின் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட உத்தரவில், "சேலம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆர்.பூங்கொடி அருமைக்கண், சேலம் மாநகராட்சி துணை ஆணையராகவும், சேலம் துணை ஆணையர் -1 பி.அசோக்குமார், சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், மதுரை மாநகராட்சி துணை ஆணையர்-1 கே.சரவணன், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜி.தனலட்சுமி, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையராகவும், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் எம்.செந்தில் முருகன் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரியாகவும், அப்பதவியில் இருந்த வி.நவிந்திரன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, புதிதாக உருவாக்கப்படும் நாமக்கல் மாநகராட்சி ஆணையராகவும், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் எஸ்.சித்ரா, புதிதாக உருவாக்கப்படும் காரைக்குடி மாநகராட்சி ஆணையராகவும், கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், புதிதாக உருவாக்கப்படும் திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையராகவும், திருநெல்வேலி மாநகராட்சி துணை ஆணையர் -1 ஏ.தாணுமூர்த்தி, தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையர்-2 கே.பாலு, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகராட்சி நிர்வாக துணை இயக்குனர் எஸ்.லட்சுமி, வேலூர் நகரட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் கண்ணன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகவும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், புதிதாக உருவாக்கப்பட உள்ள புதுக்கோட்டை மாநகராட்சியின் ஆணையராகவும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையர் செல்வபாலாஜி, நகராட்சி நிர்வாக துணை இயக்குனராகவும், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, திருவேற்காடு நகராட்சி ஆணையராகவும், அப்பதவியில் இருந்த கணேசன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையராகவும், நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், ஆவடி மாநகராட்சி உதவி ஆணையராகவும், காரைக்குடி நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் கொடைக்கானல் நகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சியாமளா, மன்னார்குடி நகராட்சி ஆணையராகவும், ஊட்டி நகராட்சி ஆணையர் ஏகராஜ், தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஜஹாங்கீர் பாஷா ஊட்டி நகராட்சி ஆணையராகவும், விழுப்புரம் நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், மறைமலைநகர் நகராட்சி ஆணையராகவும், வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் எம்.ஆர்.வசந்தி, தாம்பரம் மாநகராட்சி உதவி ஆணையராகவும், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன், விழுப்புரம் நகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#ஆட்சித்துறை
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் பொறுப்பேற்றார் _காவல்துறையினர் வாழ்த்து.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் பொறுப்பேற்றார் _காவல்துறையினர் வாழ்த்து.

தேனி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் ஐ.பி.எஸ். இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு  காவல் துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து காவலர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் டோங்கரே பிரவீன் உமேஷ் பதவியில் இருந்தார்.இந்த நிலையில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

டோங்கரே பிரவீன் உமேஷ்.
டோங்கரே பிரவீன் உமேஷ்.

அந்த வகையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த டோங்கரே பிரவீன் உமேஷ் ஐ.பி.எஸ். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிவபிரசாத் ஐ.பி.எஸ்., தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தேனி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் ஐ.பி.எஸ். இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு  காவல் துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து காவலர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

சிவபிரசாத்

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சிவப்பிரசாத் கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.கடந்த 2018 ஆம் ஆண்டு விருதுநகர் உதவி காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற அவர், பின்னர் மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆக பதவி வகுத்தார்.கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.அதன் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற இவர் தற்போது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கமென்ட்ஸ் 1
கருத்தை எழுதுக
ராதாகிருஷ்ணன். .
வாழ்த்துக்கள்.
அனைத்து கமெண்ட்களையும் பார்க்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#காவல்துறை
தேனியில் தேசிய தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம்.

தேனியில் தேசிய தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, முன்னிலையிலும்  28.11.2023 அன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தவுடன், தூய்மை பணியாளர்களுக்கு உரிய சீருடை, காலணி, கையுறை போன்ற பாதுகாப்பு உடைகளை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.மேலும், அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.

தூய்மை பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி  அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், பணியாளர்களின் பணிப்பதிவேடு,பணி மூப்பு வரன்முறைப்படுத்துதல் போன்ற அலுவலக ரீதியான பணிகளை அலுவலர்கள் பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின்படி தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் வேறுபாடு தொகையை கணக்கீடு செய்து பணியாளர்களுக்கு நிலுவைதொகையாக வழங்குவதுடன், நடப்பு மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்ட ஊதிய தொகையினை வழங்கிட, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தூய்மை பணியாளர்கள் எளிதில் அறிந்தும் கொள்ளும் வகையில் ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் தூய்மை பணியாளர்களுக்கு சென்றடையும் வகையில் முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு தொகை சரியாக பிடித்தம் செய்து அவர்களது கணக்கில் வரவு செய்வதுடன் பணியாளர்களுக்கு அதன் விவரம் குறித்து அவ்வப்போது தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் மாதாந்திர ஊதியத்தை வங்கிகணக்கில் வரவு வைக்க வேண்டும்.

அதேபோல் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதை அரசு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அதேபோல் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு உரிய சலுகைகளை பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும். பணியாளர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் 011-24648924 மற்றும் 88834 88888 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். ஆணையத்தில் தெரிவித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து தரப்படும் என தேசிய தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு ஆணையத்தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்                  சசிகலா,உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன், உதவி இயக்குநர்கள் அண்ணாதுரை (ஊராட்சிகள்), பாலசுப்பிரமணியன் (பேரூராட்சிகள்), நகராட்சி ஆணையாளர்கள், தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணைய நலக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தி லெஜண்ட்
 பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிப்ரவரியில் பிரதமர் திறக்கிறார்: ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிப்ரவரியில் பிரதமர் திறக்கிறார்: ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகளை ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்புப் பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்தார். தெற்கு ரயில்வேயில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய நேற்று ராமேசுவரம் வந்த அவர், ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து, தூக்குப் பாலம் மற்றும் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024 பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி இப்பாலத்தை திறந்து வைக்கும் வகையில் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ராமேசுவரத்தின் துணை ரயில் நிலையமாக செயல்பட்டு வரும் மண்டபம் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மண்டபம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும். ராமேசுவரம் - தனுஷ்கோடி இடையே புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் பாதைக்குத் தேவையான நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, தெற்கு ரயில்வே முதன்மை தலைமைப் பொறியாளர் ஸ்ரீ தேஷ் ரத்தன் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
 வானிலை முன்னறிவிப்பு | தமிழக டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு | தமிழக டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும்

அடுத்த 24 மணி நேரத்துக்கு, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது விசாகப்பட்டனத்துக்கு தென்கிழக்கே சுமார், 510 கி.மீ, தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இது முதலில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து 17ம் தேதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 36 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்துவரும் 24 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது.

அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,365 பஸ்கள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,675 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளன.

சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இதுவரையில் 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து நாளை இயக்கப்படுகின்றன.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
ராஞ்சியில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவரின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி அறிவிப்பு. 

ராஞ்சியில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவரின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி அறிவிப்பு. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு கடிதம் - மேலும் உயிரிழந்த மதன்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் ம.மதன்குமார் (வயது 28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இராஜேந்திரா மருத்துவக் கல்லூரியின் (Rajendra Institute of Medical Sciences) விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்த நிலையில்,மதன்குமார் காணாமல் போய் பின்னர் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக அவர் தங்கியிருந்த விடுதியின் பின்புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன்.

உடனடியாக தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் ஜார்க்கண்ட மாநில அரசுடன் தொடர்பு கொண்டு மதன்குமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொண்டதன் அடிப்படையில், அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டு, இன்று காலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் மதன்குமார் மர்மான முறையில் இறந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த துயரமான சூழ்நிலையில், மதன்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும் மதன்குமார் இறந்தது குறித்து உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு, அவரது இறப்பிற்கு நீதி கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் நான் கடிதம் மூலம் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களை வலியுறுத்தியுள்ளேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#ஆட்சித்துறை
கம்பத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

கம்பத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் (மகளிர் திட்டம்) இணைந்து 1000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு  வேலைவாய்ப்பு அளிக்கவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 04.11.2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர்.இம்முகாமில் கலந்துகொள்ள கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ.,டிப்ளமோ, ஐடிஐ,  நர்சிங், பார்மசி, டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர கல்வித் தகுதிகளுடைய அனைவரும் பங்கேற்க வேண்டும்.
 
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுனர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.மேலும், இம்முகாமில் பங்கேற்க உள்ள வேலைநாடுனர்கள் “www.tnprivatejobs.tn.gov.in“ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து இளைஞர்கள் மற்றும் வேலைநாடுனர்கள் தெரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா இன்று தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பிரச்சார வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்தும்  பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா இன்று (01.11.2023) தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு' பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் திட்ட இயக்குநர்கள் மதுமதி (ஊரக வளர்ச்சி), ரூபன்சங்கர்ராஜ் (மகளிர் திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


முதல் நபராக கலந்துரையாடலை
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#ஆட்சித்துறை